என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் 2020: விராட் கோலியுடன் இணைந்து விளையாட காத்திருக்கிறேன்- ஆரோன் பிஞ்ச்
Byமாலை மலர்6 Aug 2020 10:02 AM GMT (Updated: 6 Aug 2020 10:02 AM GMT)
ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விராட் கோலியுடன் இணைந்து விளையாட இருப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் ஆரோன் பிஞ்ச். இவர் ஐபிஎல் போட்டியில் பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரை ஏலம் எடுத்துள்ளது.
ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். அவருடன் இணைந்து விளையாட இருப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘விராட் கோலி எப்படிப்பட்ட போட்டியாளர் மற்றும் உந்துதல் உள்ளவர் என்பது எனக்குத் தெரியும். ஆர்.சி.பி.யுடன் இணைவதற்காக காத்துக் கொண்டிருக்க முடியாது. உலகின் தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து லீக் அணிகளுக்காக விளையாடும் வாய்ப்பு வேடிக்கையாக இருக்கும். சின்னசாமி மைதானத்தில் சொந்த ரசிகர்கள் மத்தியில் விளையாடுவது அமேசிங்கான விசயம். ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாட இருப்பது எனக்கு இன்னும கூடுதலானதாக இருக்கும்.
நான் முதன்முறையாக விராட் கோலியின் கேப்டன்ஷிப் கீழ் விளையாட இருக்கிறேன். ஆனால், மிகவும் ஆர்வமாக இருக்கிறது. சர்வதேச போட்டி மற்றும் ஐபிஎல் தொடரில் அவருக்கு எதிராக ஏராளமான போட்டியில் விளையாடியிருக்கிறேன். அவர் எப்படிபட்ட போட்டியாளர், உந்துதல் உடையவர் என்பது எனக்குத் தெரியும். சில விசயங்களை அவரிடன் அருகில் இருந்து பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன்.
எனது அனுபவம் எப்போதும் தயாராக இருக்கிறது. உதவி தேவைப்பட்டால் நான் அதற்கு தயாராக இருக்கிறேன். நெருக்கடியான நேரத்தில் விராட் கோலி ஏதாவது கேட்டால், அதன்பின் என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X