என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு
    X
    இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு

    கொரோனா தாக்குதல் எதிரொலி: இங்கிலாந்தில் ஜூலை 1-ந்தேதி வரை கிரிக்கெட் கிடையாது

    கொரோனா தாக்குதலின் தீவிரம் குறையாத காரணத்தால் இங்கிலாந்தில் ஜூலை 1-ந்தேதி வரை கிரிக்கெட் போட்டி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வருகிறது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. மே மாதத்திற்குள் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும் என இங்கிலாந்து அரசு நினைத்தது. இதனால் மே 28-ந்தேதி வரை கிரிக்கெட் போட்டி ஏதும் நடக்காது என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்திருந்தது.

    ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் சகஜ நிலைக்கு வர இன்னும் அதிக காலம் ஆகும் எனக் கூறப்படுகிறது. இதனால் ஜூலை 1-ந்தேதி வரை கிரிக்கெட் போட்டிகள் ஏதும் நடக்காது என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

    இங்கிலாந்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 ஆயிரத்து 738 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×