search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.80 லட்சம் வழங்கிய ரோகித் சர்மா

    கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா 80 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார்.
    மும்பை:

    கொரோனா வைரஸ் வேகமாக பரவி கடும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிதி வழங்கலாம் எனவும், அதை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கலாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். 

    இதேபோல் மாநில அரசுகள், அந்தந்த மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த வேண்டுகோளை ஏற்று பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரோகித் சர்மா, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 80 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார். 

    பிரதமரின் நிவாரண நிதிக்கு 45 லட்சம் ரூபாயும், மகாராஷ்டிர முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், Feeding India மற்றும் Welfare Of Stray Dogs ஆகிய அமைப்புகளுக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்கியிருப்பதாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×