என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி காக் - விராட் கொலி
    X
    டி காக் - விராட் கொலி

    ஒருநாள் தொடர் ரத்து - தென்ஆப்பிரிக்க அணி இன்று நாடு திரும்புகிறது

    கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான எஞ்சிய 2 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.
    கொல்கத்தா:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. இரு அணிகளும் தர்மசாலாவில் மோத இருந்த முதல் ஆட்டம் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    எஞ்சிய 2 ஆட்டங்கள் லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருந்தது. இதற்கிடையே கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான எஞ்சிய 2 போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது.

    ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்த முதலில் திட்டமிட்டனர். பின்னர் தொடரை ரத்து செய்வதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

    தென்ஆப்பிரிக்க வீரர்கள் லக்னோவில் உள்ள ஓட்டல் அறையில் முடங்கி கிடந்தனர். கொரோனா வைரஸ் காரணமாக அவர்கள் எங்கும் செல்லவில்லை. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க அணி லக்னோவில் இருந்து இன்று கொல்கத்தா சென்று அங்கிருந்து துபாய் வழியாக தங்கள் நாட்டிற்கு செல்கின்றனர்.

    Next Story
    ×