search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிசிசிஐ
    X
    பிசிசிஐ

    இரானி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகள் நிறுத்தம் - பிசிசிஐ

    கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக இரானி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரசால் 84-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மிகப்பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளை ரத்துசெய்ய வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதை இந்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளன.
     
    இதனால் திரையரங்குகள், நீச்சல் குளங்கள் போன்றவற்றை டெல்லி அரசு மூடியது. தொடர்ந்து டெல்லியில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளுக்கும் அனுமதி அளிக்க இயலாது என தெரிவித்தது.

    இதற்கிடையே, மார்ச் 29-ம் ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் 2020 சீசன் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக இரானி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    Next Story
    ×