search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஸ் டெய்லர்
    X
    ராஸ் டெய்லர்

    நாங்கள் பும்ரா மீது மட்டுமே கவனம் செலுத்தினால் சிக்கலில் மாட்டிக் கொள்வோம்: ராஸ் டெய்லர்

    இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பும்ரா பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினால் சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பும்ராவுக்கு எதிராக பந்து வீச்சை தடுத்தாடும் யுக்தியை கையாண்ட நியூசிலாந்து அணிக்கு, அது மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்தது. மூன்று போட்டிகளிலும் ஒரு விக்கெட் கூட அவருக்கு கொடுக்காமல் மற்ற பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்து தொடரை 3-0 எனக் கைப்பற்றினர்.

    இதே யுக்தியை டெஸ்ட் போட்டியிலும் கடைபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் மீது மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தினால், அது எங்களுக்கு பாதகமாக முடியும் என ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராஸ் டெய்லர் கூறுகையில் ‘‘நாங்கள் பும்ரா மீது மட்டுமே கவனம் செலுத்தினால், அது எங்களுக்கு சிக்கலை உருவாக்கும். இந்தியாவின் ஒட்டுமொத்த பந்து வீச்சுக்குழுவும் சிறப்பானது. இஷாந்த் சர்மா காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவர் அணிக்கு கூடுதல் பலத்தை கொடுப்பார். மேலும், சிறந்த பேட்டிங் யுனிட்டையும் இந்தியா பெற்றுள்ளது. நாங்கள் அவர்களுக்கு எதிராக வெற்றி பெறக்கூடிய எங்களது ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’’ என்றார்.
    Next Story
    ×