
அதன்படி தமிழ்நாடு முதலில் பேட்டிங் செய்தது. வாஷிங்டன் சுந்தர் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வாஷிங்டன் சுந்தர் 5 ரன்னிலும், முரளி விஜய் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்த வந்த பாபா அபரஜித் 27 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 32 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 58 ரன்கள் விளாசினார்.
விஜய் சங்கர் 17 பந்தில் 26 ரன்களும், ஷாருக் கான் 16 பந்தில் 19 ரன்களும் அடிக்க தமிழ்நாடு 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

அதன்பின் வந்தவர்களை விஜய் சங்கர், சாய் கிஷோர் கவனிக்க 14.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த விதர்பா 55 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழ்நாடு 113 ரன்னில் அபார வெற்றி பெற்றது.
சாய் கிஷோர் 3.5 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். விஜய் சங்கர் 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு ‘பி’ பிரிவில் 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று முதல் இடம் பிடித்துள்ளது. ராஜஸ்தான் ரன்கள் அடிப்படையில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.