search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினேஷ் கார்த்திக், ஸ்ரீசந்த்
    X
    தினேஷ் கார்த்திக், ஸ்ரீசந்த்

    நானா காரணம்?: ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டுக்கு தினேஷ் கார்த்திக் பதில்

    ஸ்ரீநிவாசனை திட்டியதாக கூறி ஸ்ரீசாந்தின் வாய்ப்பை தடுத்ததாக கூறுவது சிறுபிள்ளைத்தனமானது என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டதாக பிசிசிஐ அவருக்கு ஆயுட்கால தடைவிதித்தது. பிசிசிஐ-யின் ஆயுட்கால தடையை எதிர்த்து கோர்ட்டில் வெற்றி பெற்றுள்ளார். இருந்தாலும் தற்போது 36 வயதாகும் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்ததுள்ளது.

    2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் நான் இடம்பெறாததற்கு தினேஷ் கார்த்திக்-தான் காரணம் என ஸ்ரீசாந்த் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்தார்.

    மேலும், இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில் ‘‘நான் ஸ்ரீநிவாசனை திட்டயதாக தினேஷ் கார்த்திக், அவரிடம் சொல்லியிருக்கிறார் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான உத்தேச அணி அறிவிக்கப்பட்டபோது அதில் எனக்கு இடமில்லை. இதற்கு ஒரே காரணம் தினேஷ் கார்த்திக் ஸ்ரீநிவாசனிடம் என்னைப் பற்றி சொல்லியதுதான். தினேஷ் கார்த்திக் இதை நீங்கள் படித்தீர்கள் என்றால், எனக்கும் எனது குடும்பதிற்கும் நீங்கள் செய்தது மன்னிக்க முடியாததாகும்.

    அடுத்த வருடம் நீங்கள் கேரளாவுக்கு விளையாட வரும்போது, என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். கடவுள் ஆசிர்வதிப்பார்’’ என்று தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து கேள்ளி எழுப்பியதற்கு தினேஷ் கார்த்திக் பதில் அளிக்கையில் ‘‘ஸ்ரீசாந்த் என்ன கூறியிருக்கிறார் என்பதை நான் அறிந்தேன். இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு நான்தான் காரணம் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தால் கூட, அது சிறுபிள்ளைத்தனமாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×