என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 39 ரன்னில் 3 விக்கெட் இழப்பு
Byமாலை மலர்3 Oct 2019 11:57 AM GMT (Updated: 3 Oct 2019 12:13 PM GMT)
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்துள்ளது.
விசாகப்பட்டினம்:
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.
‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா, மயங்க் அகர்வாலின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எல்கர், மார்க் கிராம் களமிறங்கினர். மார்க்கிராம் 5 எடுத்திருந்த போது அஸ்வின் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த டி ப்ரூயின் 4 ரன்னிலும் டேனி 0 ரன்னிலும் வெளியேறினர்.
நிதானமாக விளையாடி எல்கர் 27 ரன்னிலும் பவுமா 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டும் ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.
‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா, மயங்க் அகர்வாலின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எல்கர், மார்க் கிராம் களமிறங்கினர். மார்க்கிராம் 5 எடுத்திருந்த போது அஸ்வின் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த டி ப்ரூயின் 4 ரன்னிலும் டேனி 0 ரன்னிலும் வெளியேறினர்.
நிதானமாக விளையாடி எல்கர் 27 ரன்னிலும் பவுமா 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டும் ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X