என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என்னைப் பொறுத்த வரைக்கும் விருத்திமான் சகா உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்: விராட் கோலி
Byமாலை மலர்1 Oct 2019 12:21 PM GMT (Updated: 1 Oct 2019 12:21 PM GMT)
என்னைப் பொறுத்த வரையில் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சகா என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் ரிஷப் பந்த்-ஐ நீண்ட கால விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த்-ஐ உருவாக்க முயற்சி எடுத்து வருகிறோம். அவருக்கு போதுமான அளவு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்தது.
கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் ரிஷப் பந்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டார். ஆனால் ரிஷப் பந்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அவர் மீது விமர்சனம் எழும்பியது. இந்நிலையில் நாளை தொடங்கும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டிற்கான ஆடும் லெவன் அணியில் ரிஷப் பந்திற்குப் பதிலாக சகா சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘சகா உடற்தகுதி பெற்று விளையாட தயாராக உள்ளார். அவர் எங்களுடன் இந்த தொடரை தொடங்க இருக்கிறார். அவருடைய கீப்பிங் திறமையை ஒவ்வொருவரும் பார்த்திருப்பீர்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடியுள்ளார். என்னைப் பொறுத்த வரையில் அவர் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்’’ என்றார்.
கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் ரிஷப் பந்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டார். ஆனால் ரிஷப் பந்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அவர் மீது விமர்சனம் எழும்பியது. இந்நிலையில் நாளை தொடங்கும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டிற்கான ஆடும் லெவன் அணியில் ரிஷப் பந்திற்குப் பதிலாக சகா சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘சகா உடற்தகுதி பெற்று விளையாட தயாராக உள்ளார். அவர் எங்களுடன் இந்த தொடரை தொடங்க இருக்கிறார். அவருடைய கீப்பிங் திறமையை ஒவ்வொருவரும் பார்த்திருப்பீர்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடியுள்ளார். என்னைப் பொறுத்த வரையில் அவர் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X