search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எஸ் டோனி, லோகேஷ் ராகுல் அபார சதம்: 359 ரன்கள் குவித்தது இந்தியா
    X

    எம்எஸ் டோனி, லோகேஷ் ராகுல் அபார சதம்: 359 ரன்கள் குவித்தது இந்தியா

    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் லோகேஷ் ராகுல், எம்எஸ் டோனி சதம் அடித்த வங்காளதேசத்திற்கு 360 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
    உலகக்கோப்பைக்கான 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வங்காளதேசத்தை கார்டிபில் எதிர்கொண்டு வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 1 ரன் எடுத்த நிலையிலும், ரோகித் சர்மா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 47 ரன்னிலும், விஜய் சங்கர் 2 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனால் 102 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.



    லோகேஷ் ராகுல் 99 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். எம்எஸ் டோனி 78 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 113 ரன்கள் குவித்து வெளியேறினார். இருவரின் சதத்தால் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது.

    பின்னர் 360 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×