search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா அணி 2-வது வெற்றி - ரசல், நிதிஷ் ரானாவுக்கு தினேஷ் கார்த்திக் பாராட்டு
    X

    கொல்கத்தா அணி 2-வது வெற்றி - ரசல், நிதிஷ் ரானாவுக்கு தினேஷ் கார்த்திக் பாராட்டு

    பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ரசல் மற்றும் நிதிஷ் ரானாவுக்கு கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பாராட்டு தெரிவித்துள்ளார். #IPL2019 #DineshKarthik
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

    கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா ரைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன் குவித்தது.

    உத்தப்பா 50 பந்தில் 67 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), நிதிஷ் ரானா 34 பந்தில் 63 ரன்னும் (2 பவுண்டரி, 7 சிக்சர்) ஆந்த்ரே ரசல் 17 பந்தில் 48 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். முகமது ‌சமி, வருண் சக்கரவர்த்தி, விஜோயன், ஆந்த்ரே டை ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    டேவிட் மில்லர் 40 பந்தில் 59 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), அகர்வால் 34 பந்தில் 58 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) மன்தீப்சிங் 15 பந்தில் 33 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரசல் 2 விக்கெட்டும், பெர்குசன், பியூல் சாவ்லா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    கொல்கத்தா அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி இருந்தது. பஞ்சாப் அணி முதல் தோல்வியை தழுவியது.

    இந்த வெற்றி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    இந்தப் போட்டியின் தொடக்கமே எங்களுக்கு சிறப்பாக இருந்தது. நிதிஷ் ரானாவின் ஆட்டம் மிகவும் அழகாக இருந்தது. இதே போல உத்தப்பாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இறுதியில் ரசல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். காயத்தில் இருந்து குணமடைந்த சுனில் நரேன் திரும்பி இருக்கிறார். அவர் எப்போதுமே சவாலாக இருந்தார்.

    தோல்வி குறித்து பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-

    நோபாலால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். சிறிய தவறுகள் ஆட்டத்தை மாற்றி விடும். 219 ரன் எடுக்க கூடிய இலக்குதான். நாங்கள் செய்த தவறுகளால் தோல்வி ஏற்பட்டது. பேட்டிங்தான் ஆட்டத்துக்கு மிகவும் முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொல்கத்தா நைட் டைரடர்ஸ் அணி 3-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை 30-ந்தேதி எதிர்கொள்கிறது. பஞ்சாப் அணி அதே தினத்தில் மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது. #IPL2019
    Next Story
    ×