search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எஸ் டோனி, தவான் உள்ளூர் தொடர்களை புறக்கணிக்க காரணம் என்ன?: பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கேள்வி
    X

    எம்எஸ் டோனி, தவான் உள்ளூர் தொடர்களை புறக்கணிக்க காரணம் என்ன?: பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கேள்வி

    உள்ளூர் தொடர்களில் எம்எஸ் டோனி, தவான் ஏன் விளையாடவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். #MSDhoni #Gavaskar
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. தற்போதைய நிலையில் டோனி ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடும் நிலையில் உள்ளார். இதனால் அதிக நேரம் ஓய்வு கிடைக்கிறது. தற்போது தவான் டெஸ்ட் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இதனால் அவரும் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

    இந்தியாவின் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இருவரும் விளையாடவில்லை. இந்நிலையில் எம்எஸ் டோனி மற்றும் தவான் ஏன் உள்ளூர் தொடர்களில் விளையாடவில்லை என்று பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘ நீங்கள் ஏன் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை? என்று நாம் ஏன் கேட்கக்கூடாது. உண்மையிலேயே பிசிசிஐயிடம், சர்வதேச போட்டிகளில் அவர்கள் இடம்பெறாத நிலையில் உள்ளூர் தொடர்களை புறக்கணிக்க ஏன் அனுமதி கொடுத்தீர்கள் என்று பிசிசிஐ மற்றும் தேர்வாளர்களிடம் நாம் கேள்வி கேட்க வேண்டும்.

    டோனி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 தொடரில் விளையாடவில்லை. அதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவில்லை. தற்போது தொடங்க இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாடப்போவதில்லை.



    இதனால் அக்டோபரில் இருந்து அவர் விளையாடவில்லை. ஜனவரியில்தான் ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இதனால் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் சரியாக விளையாடவில்லை என்றால், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் பெயர் இடம்பிடிக்க, பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும்.

    உங்களுக்கு வயது ஆகஆக, உங்களுடைய ஆட்டத்திற்கு இடையே இடைவெளி ஏற்பட்டால், ஆட்டத்திறன் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். நீங்கள் உள்ளூர் தொடரில் எந்தவொரு பார்மில் விளையாடினாலும், நீண்ட இன்னிங்ஸ் விளையாட வாய்ப்பு கிடைக்கும். இது சிறந்த பயிற்சியாக அமையும்’’ என்றார்.
    Next Story
    ×