என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி லீக் - புனேவை வீழ்த்தி ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது தெலுங்கு டைடன்ஸ்
Byமாலை மலர்13 Nov 2018 4:24 PM GMT (Updated: 13 Nov 2018 4:24 PM GMT)
புரோ கபடி லீக் போட்டியில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பல்டன் அணியை வீழ்த்திய தெலுங்கு டைடன்ஸ் அணி தனது ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
மும்பை:
12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைடன்ஸ் அணியும், புனேரி பல்டன் அணியும் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயெ தெலுங்கு டைடன்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 11 - 17 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைடன்ஸ் அணி முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் தெலுங்கு டைடன்ஸ் அணி துடிப்பாக விளையாடியது. புனேரி பல்டன் அணியும் சளைக்காமல் புள்ளிகளை எடுத்தது.
இறுதியில், பரபரப்பான கட்டத்தில் தெலுங்கு டைடன்ஸ் அணி 28 - 25 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பல்டன் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் தெலுங்கு டைடன்ஸ் அணி ஐந்தாவது வெற்றியை பெற்றது. #ProKabaddi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X