search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த ஜஸ்பிரித் பும்ரா
    X

    5 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த ஜஸ்பிரித் பும்ரா

    டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்தியாவின் வெற்றி உறுதியாகியது. #ENGvIND #INDvENG
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து, ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சில் சிக்கியதால் முதல் இன்னிங்சில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இரண்டாவது இன்னிங்சில் கோலியின் சிறப்பான சதத்தால் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து, இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

    இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஜென்னிங்ஸ் 13 ரன்னிலும், குக் 17 ரன்னிலும், ஜோ ரூட் 13 ரன்னிலும், போப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 62 ரன்னுக்குள் இங்கிலாந்து முதல் நான்கு விக்கெட்டுக்களையும் இழந்து திணறியது.

    ஐந்தாவது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 169 ரன்கள் சேர்த்து இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடியை தந்தனர்.

    இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். அணியின் எண்ணிக்கை 231 ஆக இருக்கும்போது ஜோஸ் பட்லர் 106 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ், கிறீஸ் வோக்ஸ் ஆகியோரையும் பும்ரா வெளியேற்றினார். தொடர்ந்து நிதானமாக ஆடிய பென் ஸ்டோக்ஸ்சை 62 ரன்களில் பாண்ட்யா வெளியேற்றினார்.

    இறுதியில், அடில் ரஷித்தும், ஸ்டூவர்ட் பிராடும் அடித்து ஆடி 50 ரன்கள் சேர்த்தனர். பிராடு 20 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார்.

    இதையடுத்து, பும்ரா 29 ஓவரில் 89 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். கடைசி நாளில் ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுவதால் இந்தியாவின் வெற்றியை பும்ரா உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ENGvIND #INDvENG
    Next Story
    ×