search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகார், ஜார்கண்டில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது
    X

    பீகார், ஜார்கண்டில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

    பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #IPL2018 #VIVOIPL #CricketBetting

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கி, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் பணம், 10 செல்போன்களை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

    அதேபோல ஜார்கண்ட் மாநிலத்தின் ஜேம்ஷெட்பூர் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.26.44 லட்சம் பணம், 390 கிராம் தங்கம், 13 செல்போன்கள், 2 லேப்டாப்கள், ஒரு டேப் மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். #IPL2018 #VIVOIPL #CricketBetting
    Next Story
    ×