search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது
    X

    டெல்லியில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

    டெல்லியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட போலீசார் கைது செய்துள்ளனர். #IPL2018 #VIVOIPL #CricketBetting

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியின் கஞ்ஜவ்லா பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள நிசாம்பூர் கிராமத்தில் போலீசார் நடத்தினர். இந்த சோதனையின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். 

    அவர்கள் கடந்த மே 13-ம் தேதி நடைபெற்ற சென்னை - ஐதராபாத் இடையிலான ஆட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து 68 செல்போன்கள், 8 லேப்டாப்கள், 3 எல்.இ.டி. டிவிகள் மற்றும் சில பொருட்களை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். #IPL2018 #VIVOIPL #CricketBetting
    Next Story
    ×