என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது
Byமாலை மலர்15 May 2018 8:48 PM GMT (Updated: 15 May 2018 8:48 PM GMT)
டெல்லியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட போலீசார் கைது செய்துள்ளனர். #IPL2018 #VIVOIPL #CricketBetting
புதுடெல்லி:
ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியின் கஞ்ஜவ்லா பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள நிசாம்பூர் கிராமத்தில் போலீசார் நடத்தினர். இந்த சோதனையின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கடந்த மே 13-ம் தேதி நடைபெற்ற சென்னை - ஐதராபாத் இடையிலான ஆட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து 68 செல்போன்கள், 8 லேப்டாப்கள், 3 எல்.இ.டி. டிவிகள் மற்றும் சில பொருட்களை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். #IPL2018 #VIVOIPL #CricketBetting
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X