என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
Byமாலை மலர்13 May 2018 3:15 PM GMT (Updated: 13 May 2018 3:15 PM GMT)
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். #IPL2018 #VIVOIPL #CricketBetting
ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் உள்ள சாடட்கஞ்ச் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.22 லட்சம் பணம், ஐந்து செல்போன்கள், டிவி, செட்-டாப் பாக்ஸ் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #IPL2018 #VIVOIPL #CricketBetting
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X