என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் 2018- 50 பந்தில் 92 ரன்கள் விளாசல்- ஷிகர் தவானுக்கு கேன் வில்லியம்சன் பாராட்டு
Byமாலை மலர்11 May 2018 10:23 AM GMT (Updated: 11 May 2018 10:23 AM GMT)
டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 50 பந்தில் 92 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்த தவானுக்கு கேன் வில்லியம்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். #IPL2018 #DDvSRH
ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.
பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தவான் (92), கேன் வில்லியம்சன் (83) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 18.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷிகர் தவான் 50 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 92 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதனால் கேன் வில்லியம்சன் அவரை பாராட்டியுள்ளார்.
போட்டிக்குப்பின் கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘பேட்டிங்கில் எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தினோம். எதிரணியை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினோம். ஆனால் அது எப்போதுமே கடினமாக இலக்கு. முதல் பாதி ஆட்டத்தின்போது ஆடுகளம் கடினமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடினார்.
ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது. இதில் நல்ல உத்வேகம் கிடைத்தது. ஷிகர் தவான் பேட்டிங் அபாரமாக இருந்தது. அவர் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தை வெளிக்காட்டினார்’’ என்றார்.
பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தவான் (92), கேன் வில்லியம்சன் (83) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 18.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷிகர் தவான் 50 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 92 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதனால் கேன் வில்லியம்சன் அவரை பாராட்டியுள்ளார்.
போட்டிக்குப்பின் கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘பேட்டிங்கில் எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தினோம். எதிரணியை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினோம். ஆனால் அது எப்போதுமே கடினமாக இலக்கு. முதல் பாதி ஆட்டத்தின்போது ஆடுகளம் கடினமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடினார்.
ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது. இதில் நல்ல உத்வேகம் கிடைத்தது. ஷிகர் தவான் பேட்டிங் அபாரமாக இருந்தது. அவர் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தை வெளிக்காட்டினார்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X