என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல் கிளாசிகோ- 10 பேருடன் 2-2 என டிரா செய்தது பார்சிலோனா- ரியல் மாட்ரிட் ஏமாற்றம்
    X

    எல் கிளாசிகோ- 10 பேருடன் 2-2 என டிரா செய்தது பார்சிலோனா- ரியல் மாட்ரிட் ஏமாற்றம்

    பார்சிலோனா - ரியல் மாட்ரிட் இடையிலான எல் கிளாசிகோ போட்டி 2-2 என டிராவில் முடிந்தது. #ELcalsico #barcelona #RealMadrid
    லா லிகா கால்பந்து லீக்கில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டத்திற்கு எல் கிளாசிகோ என்று பெயர். இரண்டு முன்னணி அணிகள் விளையாடியதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

    பார்சிலோனா சொந்த மைதானத்தில் தோல்வியடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்திலும், முதல் தோல்விக்கு எப்படியாவது பதிலடி கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் ரியல் மாட்ரிட் அணியும் களம் இறங்கின.



    போட்டி தொடங்கியது முதலே இரு அணி வீரர்கள் ஆட்டத்திலும் அனல் பறந்தது. ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் வலது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து பாஸ் செய்யப்பட்ட பந்தை லூயிஸ் சுவாரஸ் அருமையான முறையில் அடித்து முதல் கோலை பதிவு செய்தார். பார்சிலோனா கோலிற்கு பதிலடியாக கிறிஸ்டியானோ ரொனால்டோ 14-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.



    முதல் பாதி நேரத்தில் காயம் மற்றும் ஆட்டம் நிறுத்தம் ஆகியவற்றை கணக்கிட்டு கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. இதன் 3-வது நிமிடத்தில் (ஆட்டத்தின் 48-வது நமிடம்) பார்சிலோனா அணியின் செர்ஜி ரொபெர்ட்டோ ரெட் கார்டு பெற்று வெளியேறினார்.

    இதனால் 2-வது பாதி நேரத்தில் பார்சிலோனா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. என்றாலும் சொந்த மைதானத்தில் ரசிகர்களின் பேராதரவோடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 52-வது நிமிடத்தில் மெஸ்சி ரியல் மாட்ரிட் அணியின் பின்கள வீரர்களை சாதுர்யமாக ஏமாற்றி கோல் அடித்தார். இதனால் பார்சிலோனா 2-1 என முன்னிலைப் பெற்றது.



    இதற்கு பதில் கோலாக 72-வது நிமிடத்தில் காரேத் பேலே கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 2-2 என சமநிலைப் பெற்றது. அதன்பின் 18 நிமிடங்கள் பார்சிலோனா அணி ரியல் மாட்ரிட்டை கோல் அடிக்கவிடவில்லை. அதேவேளையில் மெஸ்சி இரண்டுமுறை கோல் அடிக்க முயற்சி செய்தார். முதன்முறை ரியல் மாட்ரிட் கோல் கீப்பர் சிறப்பாக தடுத்து விட்டார். 2-வது முறை கோல் கம்பம் அருகில் சென்றது. இதனால் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.
    Next Story
    ×