search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு
    X

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு

    டெல்லியில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL2018 #DDvRR
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியின் 32-வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
     
    முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால், டெல்லியில் மழை பெய்து வருவதால் ஆட்டம்  பாதிக்கப்பட்டுள்ளது.

    இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:

    டெல்லி டேர் டெவில்ஸ் அணி: பிரித்வி ஷா, காலின் முன்ரோ, ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷப் பந்த், கிளென் மேக்ஸ்வெல், விஜய் சங்கர், லியாம் பிளெங்கட், அமித் மிஷ்ரா, ஷாபாஸ் நதீம், அவேஷ் கான், டிரெண்ட் போல்ட்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: அஜிங்கியா ரகானே (கேப்டன்), டி அக்ரி சார்ட், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ராகுல் திரிபாதி, கிருஷ்ணப்பா கவுதம், ஜோப்ரா ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் உனத்கட், தவால் குல்கர்னி #IPL2018 #DDvRR
    Next Story
    ×