என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி கேப்டன் பல சாதனைகள் படைக்க இருக்கிறார்.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. கடந்த முறை 1-4 எனத் தோல்வியடைந்த இந்திய அணி, தற்போது அதற்கு பதிலடி கொடுக்க இருக்கிறது.

    கடந்த முறை இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடினார். அதேபோன்று தற்போதும் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன.

    இந்த நிலையில் இங்கிலாந்து தொடரில் முக்கியமான ஐந்து சாதனைகளை படைக்க இருக்கிறார்.

    விராட் கோலி டெஸ்ட் போட்டியில் 7547 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் 453 ரன்கள் அடித்தால் 8 ஆயிரம் ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுவார். தற்போது வரை 92 போட்டிகளில் 27 சதம், 25 அரைசதம் அடித்துள்ளார். அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் வரிசையில் ஜஸ்டின் லாங்கர் (7696), இயன் பெல் (7727), மிக்கேல் ஆதர்டன் (7728) ஆகியோரை பின்னுக்கு தள்ள இருக்கிறார்.

    இங்கிலாந்துக்கு எதிராக 211 ரன்கள் அடித்தால், அந்த அணிக்கு எதிராக 2000 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். டிராவிட் 1950 ரன்கள் அடித்துள்ள நிலையில் அலஸ்டைர் குக் (இந்தியாவுக்கு எதிராக), சச்சின் தெண்டுல்கர் சாதனையுடன் இணைவார்.

    சேவாக் டெஸ்ட் போட்டியில் 54 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். விராட் கோலி 10 இன்னிங்சில் 3 அரைசதத்திற்கு மேல் அடித்தால் ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், லட்சுமண் சாதனையுடன் இணைய வாய்ப்புள்ளது.

    27 சதம் அடித்துள்ள விராட் கோலி மேலும் ஒரு சதம் அடித்தால் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளுவார். இரண்டு சதம் அடித்தால், ஹசிம் அம்லா, மைக்கேல் கிளார்க் சாதனையை முறியடிப்பார்.

    விராட் கோலியும், கிளைவ் லாய்டு தலா 36 டெஸ்ட் போட்டியில் கேப்டனாக வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் விராட் கோலி கிளைவ் லாய்டு சாதனையை முறியடிப்பார்.

    இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றால், 2007-ம் ஆண்டு டிராவிட் தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றிய பின்னர், இந்தியா சாதனைப் படைக்கும். கபில்தேவ், அஜித் வடேகர் தலைமையிலான டெஸ்ட் அணிகள் மட்டுமே இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.
    அரையிறுதி போட்டியில் நம்பர் ஒன் வீரருக்கு அதிர்ச்சி கொடுத்த ஜெர்மனி வீரர் ஸ்வெரேவ் ரஷ்ய வீரரை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
    டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 12-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் காசனோவ்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-3, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றிப்பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இவர் அரையிறுதியில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தோல்வியடைந்த காசனோவ் வெள்ளிப்பதக்கம் வென்றார். 

    ஸ்வெரேவ்

    பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் செக்குடியரசு ஜோடி சுவிட்சர்லாந்து ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
    ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்கள் வென்ற வீராங்கனை என்ற அசுர சாதனையை ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை படைத்துள்ளார்.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4x400மீ  மெட்லே ரிலே நீச்சல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வீராங்கனைகள் பந்தய தூரத்தை 3 நிமிடம் 51.60 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்கம் வென்றனர். அத்துடன் 2012-ம் ஆண்டு அமெரிக்க வீராங்கனைகள் 3 நிமிடம் 52.05 வினாடிகளில் கடந்த ஒலிம்பிக் சாதனையை முறியடித்தனர்.

    ஆஸ்திரேலிய அணியில் எம்மா மெக்கியான்  இடம் பிடித்திருந்தார். இதில் தங்கப்பதக்கம் வென்றதுடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்கு தங்கப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கம் என ஏழு பதக்கங்கள் வென்றுள்ளார்.

    இதற்கு முன் 1952-ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த கிறிஸ்டின் ஓட்டோ ஒரே ஒலிம்பிக்கில் ஆறு பதக்கங்கள் வென்றது சாதனையாக இருந்தது. அதை 2008-ம் ஆண்டு அமெரிக்காவின் நடேலி காங்லின் ஆறு பதக்கங்கள் வென்று சமன் செய்திருந்தார்.

    எம்மா மெக்கியான்

    தற்போது எம்மா மெக்கியான் ஏழு பதக்கங்கள் பெற்று அவர்களது சாதனையை முறியடித்துள்ளார்.

    எம்மா மெக்கியான் 4x100மீ ஃப்ரீஸ்டைல் ரிலே, 100மீ பட்டர்ஃப்ளை, 100மீ பேக்ஸ்ட்ரோக், 4x200மீ ஃப்ரீஸ்டைல் ரிலே, 100மீ ஃப்ரீஸ்டைல், 200மீ பேக்ஸ்ட்ரோக், மிக்ஸ்டு 4x100மீ மிட்லே ரிலே ஆகியப் பிரிவில் பதக்கம் வென்றுள்ளார்.
    பெண்களுக்கான 4*100 மீட்டர் மெட்லே தொடர் நீச்சலில் ஆஸ்திரேலியா புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றது.

    டோக்கியோ:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த 50 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அமெரிக்க வீரர் டிரெசல் புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

    அவர் பந்தய தூரத்தை 21.07 வினாடியில் கடந்தார். இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் பிரேசில் வீரர் சியலோ 21.30 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

    டிரெசல் டோக்கியோ ஒலிம்பிக்கில் கைப்பற்றிய 4-வது தங்கப்பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 100 மீட்டர் பட்டர்பிளை, 100 மீட்டர் பிரீஸ்டைல், 4*100 பிரீஸ்டைல் தொடர் நீச்சல், 4*100 மீட்டர் மெட்லி தொடர் நீச்சல் ஆகியவற்றில் தங்கம் வென்றிருந்தார்.

    ஒட்டுமொத்தத்தில் ஒலிம்பிக்கில் டிரெசல் 6-வது தங்கத்தை கைப்பற்றினார். ரியோ ஒலிம்பிக்கில் அவர் 2 தங்கப்பதக்கமும் வென்றார்.

    பெண்களுக்கான 4*100 மீட்டர் மெட்லே தொடர் நீச்சலில் ஆஸ்திரேலியா புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றது.

    ஹோட்சஸ், மெக்கவுன், கேம்பல், கெய்லிமெக்கூன் ஆகியோர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி பந்தய தூரத்தை 3 நிமிடம் 51.60 வினாடியில் கடந்தது. இதற்கு முன்பு 2012 லண்டன் ஒலிம்பிக்கில் அமெரிக்கா 3 நிமிடம் 52.05 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. அமெரிக்காவுக்கு வெள்ளிப்பதக்கமும், கனடாவுக்கு வெண்கலபதக்கமும் கிடைத்தன.

    பெண்களுக்கான 50 மீட்டர் பிரீஸ்டைலில் ஆஸ்திரேலியாவும், ஆண்களுக்கான 1,500 மீட்டர் பிரீஸ்டைலில் அமெரிக்காவும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றின.

    தடகள போட்டியில் இன்று காலை சீனாவுக்கு தங்கம் கிடைத்தது. பெண்களுக்கான குண்டு எறியும் போட்டியில் அந்நாட்டை சேர்ந்த லிஜியோ காங் 20.5 8 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தை பிடித்தார்.

    அமெரிக்காவை சேர்ந்த சான்டர்ஸ் 19.79 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கமும், அமெரிக்காவை சேர்ந்த வளாரி ஆடம்ஸ் 19.62 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கமும் பெற்றனர். 

    பி.வி.சிந்து இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சீனாவை சேர்ந்த ஹி பி ஜியாவ்வை சந்திக்கிறார்.

    டோக்கியோ:

    இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையும், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்றவருமான பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் லீக் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அவர் முதல் ஆட்டத்தில் இஸ்ரேலை சேர்ந்த பொலி கார்போவை 21-7, 21-10 என்ற கணக்கிலும், 2-வது போட்டியில் ஆங்காங் வீராங்கனை நகன் யூ சென்ங்கை 21-9, 21-6 என்ற கணக்கிலும் வீழ்த்தினார்.

    கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி.சிந்து டென்மார்க்கை சேர்ந்த பிளிச் பெல்ட்டை 21-15, 21-13 என்ற கணக்கிலும், கால்இறுதியில் 5-வது வரிசையில் உள்ள யமகுச்சியை (ஜப்பான்) 21-13, 22-20 என்ற கணக்கிலும் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரை இறுதியில் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். 7-வது வரிசையில் உள்ள அவர் 18-21, 12-21 என்ற கணக்கில் 2-ம்நிலை வீராங்கனையான தாய் சுயிங்கிடம் (சீன தைபெ) தோற்றார்.

    அவரால் ஒரு செட்டை கூட வெல்லமுடியவில்லை. அந்த அளவுக்கு தாய் சு யிங்கின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது.

    பி.வி.சிந்து இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சீனாவை சேர்ந்த ஹி பி ஜியாவ்வை சந்திக்கிறார். இதில் அவர் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் பெறுவாரா? என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    சீன வீராங்கனை தர வரிசையில் 9-வது இடத்தில் உள்ளார். இதனால் பி.வி.சிந்து நம்பிக்கையுடன் விளையாடுவார். 


    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்று மாலை நடைபெறும் முதல் போட்டியில் திருச்சி வாரியர்ஸ்‌- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக். (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் 2 ரன்னில் கோவை கிங்சை தோற்கடித்தது. மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதிய மற்றொரு போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

    14-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் திருச்சி வாரியர்ஸ்‌- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திருச்சி வாரியர்ஸ் 6 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4- வது வெற்றி வேட்கையில் இருக்கிறது. சேலம் அணி 3 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருப்பூருடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லையிடம் தோற்றது. 3-வது ஆட்டத்தில் சேலம் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    3 புள்ளிகளுடன் இருக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    திண்டுக்கல் அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

    இங்கிலாந்து வீரரை தொடர்ந்து தலையில் தாக்கி நிலைகுலையச் செய்ததால் பிரான்ஸ் குத்துச்சண்டை வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
    ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான குத்துச்சண்டையில் சூப்பர் வெவி வெயிட் (91 கிலோ எடைக்குள் மேல்) பிரிவில் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. 2-வது காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் பிரேசர் கிளார்க்- பிரான்சின் மௌராட் ஆலிவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    இதில் பிரான்ஸ் வீரர் ஆலிவ் முதல் சுற்றில் இங்கிலாந்து வீரர் கிளார்க் மீது ஆக்ரோசமாக தாக்கினார். குறிப்பாக தலையை குறிவைத்து தாக்கினார். இதனால் கிளார்க் நிலைகுலைந்தார். முதல் சுற்றில் ஐந்து நடுவர்களிடம் இருந்து பிரான்ஸ் வீரர் ஆலிவ் 10-9, 10-9, 10-9, 9-10, 9-10 புள்ளிகள் பெற்றிருந்தார்.

    எதிர் வீரரை தலையில் தாக்கக்கூடாது என நடுவர் எச்சரிக்க, 2-வது சுற்றிலும் தொடர்ந்து அவ்வாறே செய்தார். இதனால் 2-வது சுற்று ஆட்டம் 2.56 நிமிடத்தில் நிறுத்தப்பட்டு பிரான்ஸ் வீரர் ஆலிவ் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என அறிவிக்கப்பட்டது.

    இதனால் இங்கிலாந்து வீரர் கிளார்க் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆலிவ் ரிங்கை விட்டு வெளியேறாமல் அரைமணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார். இருந்தாலும் தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

    கிளார்க் அரையிறுதிக்கு முன்னேறியதால், இங்கிலாந்துக்கு பதக்கம் ஒன்று உறுதியாகியுள்ளது.
    அமெரிக்கா 19 தங்கத்துடன் 52 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தில் இருக்கும் நிலையில், போட்டியை நடத்தும் ஜப்பான் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது.
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் போட்டியை நடத்தும் ஜப்பான் பதக்கப்பட்டியலில் முதல் இடம் பிடித்திருந்தது. அதன்பின் சீனா, அமெரிக்க நாடுகள் ஆதிக்கம் செலுத்தின.

    தடகள போட்டிகள் தொடங்கியதும் சீனா, அமெரிக்கா இடையே பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சீனா 22 தங்கம், 13 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தமாக 47 பதக்கங்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

    அமெரிக்கா 19 தங்கம், 20 வெள்ளி, 13 வெண்கலம் என 52 பதக்கங்கள்  வென்று 2-வது இடத்தில் உள்ளது. ஜப்பான் 17 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

    கோப்புப்படம்

    ஆஸ்திரேலியா 13 தங்கம், 3 வெள்ளி, 14 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது. ரஷ்யா 11 தங்கத்துடன் 5-வது இடத்திலும், கிரேட் பிரிட்டன் 9 தங்கத்துடன் 6-வது இடத்திலும் உள்ளன.

    இந்தியா ஒரு வெள்ளியுடன் 61-வது இடத்தில் உள்ளது.
    அமெரிக்க வீராங்கனை ரவேன் சவுண்டர்ஸ் 19.79 மீட்டர் தூரத்திற்கு எறிந்து வெள்ளி பதக்கம் வென்றார். நியூசிலாந்து வீராங்கனை வெண்கலப்பதக்கம் வென்றார்.
    ஒலிம்பிக் தடகளத்தில் இன்று பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் 12 பேர் கலந்து கொண்டனர். சீன வீராங்கனை லிஜியாவோ காங்க் 20.58 மீட்டர் தூரத்திற்கு எறிந்து முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

    அமெரிக்க வீராங்கனை ரவேன் சவுண்டர்ஸ் 19.79 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். நியூசிலாந்து வீராங்கனை வாலெரி ஆடம்ஸ் 19.62 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
    டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை ஆண்கள் சூப்பர் ஹெவிவெயிட் 91 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி சுற்றில் இந்திய வீரர் சதீஷ்குமார் தோல்வியடைந்தார்.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று குத்துச்சண்டை ஆண்கள் சூப்பர் ஹெவிவெயிட் 91 கிலோ எடைப்பிரிவுக்கான காலிறுதி போட்டிக்கள் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் சதீஷ்குமார் பங்கேற்றார். அவர் உஸ்பெகிஸ்தான் வீரர் பஹதீர் ஜலோலோவை எதிர்கொண்டார்.

    போட்டி துவங்கியது முதலே உஸ்பெகிஸ்தான் வீரர் பஹதீர் ஆதிக்கம் செலுத்தினார். அவர் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றார். பஹதீர் போட்டியின் அனைத்து சுற்றுகளையும் கைப்பற்றினார். ஆனால், இந்திய வீரர் சதீஷால் ஒரு சுற்றைக்கூட கைப்பற்ற முடியவில்லை. இதனால், இந்திய வீரர் சதீஷை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி உஸ்பெகிஸ்தான் வீரர் பஹதீர் அபார வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் பஹதீர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

    இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீரர் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து போட்டியை விட்டு வெளியேறினார். 
    மன் கவுர் மறைவுக்கு பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரிந்தர் சிங் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    சண்டிகர்:

    சண்டிகரை சேர்ந்த மூத்தோர் தடகள வீராங்கனையான மன் கவுர் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 105. அவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 90 வயதுக்கு பிறகு தடகளத்தில் அடியெடுத்து வைத்த மன் கவுர் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல பதக்கங்கள் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

    100 வயதுக்கு பிறகும் தணியாத தாகத்துடன் மூத்தோர் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற அவர் 2017-ம் ஆண்டு ஆக்லாந்தில் நடந்த உலக மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் போலந்தில் நடந்த உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார். மன் கவுர் மறைவுக்கு பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரிந்தர் சிங் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    33 வயதான உதனா இலங்கை அணிக்காக 21 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 18 விக்கெட்டும், 35 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் இசுரு உதனா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடுவதற்கு இதுவே சரியான நேரம் என்று நம்புவதாக கூறிய உதனா தொடர்ந்து உள்ளூர் மற்றும் 20 ஓவர் வடிவிலான லீக் போட்டிகளில் விளையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

    33 வயதான உதனா இலங்கை அணிக்காக 21 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 18 விக்கெட்டும், 35 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். இது தவிர இவ்விரு வடிவிலான போட்டிகளில் தலா ஒரு அரைசதமும் அடித்துள்ளார்.
    ×