என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோக்கியோ ஒலிம்பிக்: குத்துச்சண்டை காலிறுதி சுற்றில் இந்திய வீரர் தோல்வி
Byமாலை மலர்1 Aug 2021 4:55 AM GMT (Updated: 1 Aug 2021 4:55 AM GMT)
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை ஆண்கள் சூப்பர் ஹெவிவெயிட் 91 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி சுற்றில் இந்திய வீரர் சதீஷ்குமார் தோல்வியடைந்தார்.
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று குத்துச்சண்டை ஆண்கள் சூப்பர் ஹெவிவெயிட் 91 கிலோ எடைப்பிரிவுக்கான காலிறுதி போட்டிக்கள் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் சதீஷ்குமார் பங்கேற்றார். அவர் உஸ்பெகிஸ்தான் வீரர் பஹதீர் ஜலோலோவை எதிர்கொண்டார்.
போட்டி துவங்கியது முதலே உஸ்பெகிஸ்தான் வீரர் பஹதீர் ஆதிக்கம் செலுத்தினார். அவர் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றார். பஹதீர் போட்டியின் அனைத்து சுற்றுகளையும் கைப்பற்றினார். ஆனால், இந்திய வீரர் சதீஷால் ஒரு சுற்றைக்கூட கைப்பற்ற முடியவில்லை. இதனால், இந்திய வீரர் சதீஷை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி உஸ்பெகிஸ்தான் வீரர் பஹதீர் அபார வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் பஹதீர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீரர் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து போட்டியை விட்டு வெளியேறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X