என் மலர்
செய்திகள்

ஆப்பிள் ஐபோன் X புளூ ப்ரின்ட் லீக்ஸ்: முழு தகவல்கள்
ஆப்பிள் நிறுவனம் தயாரித்து இந்த ஆண்டிலேயே வெளியிடவுள்ள புதிய ஐபோனின் புளூ ப்ரின்ட் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் வெளியாகியுள்ள சில சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் ஐபோன் சார்ந்து பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. வழக்கமான புகைப்படம் மற்றும் வீடியோக்களோடு புதிய ஐபோனின் ப்ளூ ப்ரின்ட் இணையத்தில் கசிந்துள்ளது. ஐபோன்களின் பத்தாவது ஆண்டு என்ற நிலையில், இந்த மாடல் ஐபோன் 8 அல்லது ஐபோன் X என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
புதிய ப்ளூ ப்ரின்ட்டில் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய ஐபோனில் இரட்டை கேமரா அமைப்பு போனின் இடதுபுறத்தில் செங்குத்தாக பொறுத்தப்பட்டுள்ளது. இத்துடன் முந்தைய ஐபோனில் வழங்கப்பட்ட A10 ஃபியூஷன் சிப்செட்-ஐ விட மேம்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த A11 சிப்செட் வழங்கப்படும் என்றும் இது சிம் மாட்யூலின் கீழ் பொறுத்தப்படும்.
இத்துடன் டிஸ்ப்ளேவின் மேல்பக்கம் 3D கேமரா மற்றும் இன்ஃப்ரா ரெட் பயோமெட்ரிக் ஸ்கேனர் வழங்கப்படும் என்றும். கீழ் பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டாப்டிக் என்ஜின் மற்றும் இரண்டு 3D டச் என்ஜின்கள் டிஸ்ப்ளேவின் கீழ் பொறுத்தப்படும். இத்துடன் பேட்டரி செயல்பாட்டை அதிகரிக்கும் விதமாக இரண்டு பேட்டரிகள் வழங்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

கைரேகை ஸ்கேனர் புதிய ஐபோனின் முன்பக்கம் பொறுத்தப்படும் என்றும், ஃபுல் விஷன் டிஸ்ப்ளே திரையை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. எனினும் கைரேகை ஸ்கேனர் எவ்வாறு பொறுத்தப்படும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோனில் 3D சென்சிங் ஆக்மெண்ட்டெட் ரியாலிட்டி வசதி கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என்றும் இன்பராரெட் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசீவர் மாட்யூல் தொழில்நுட்பங்களின் மூலம் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டை முற்றிலுமாக மாற்றியமைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இத்துடன் சாம்சங் OLEDக்களுக்கு மாற்றாக ஆப்பிள் தனது புதிய சாதனங்களில் மைக்ரோ-எல்இடிக்களை பொறுத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Next Story






