என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும்: எடியூரப்பா
- கர்நாடக சட்டசபைக்கு நாளை தேர்தல் நடக்கிறது.
- மத்திய அரசு கர்நாடகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபைக்கு நாளை (புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நிறைவடைந்து உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எங்கள் கட்சி 130 முதல் 135 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. வருணா தொகுதியில் சித்தராமையா தோல்வி அடைவார். அங்கு எங்கள் கட்சியின் வேட்பாளர் சோமண்ணா வெற்றி பெறுவது உறுதி.
தேர்தல் முடிவடைந்த பிறகு நாம் மீண்டும் இங்கு சந்திப்போம். அப்போது நான் தற்போது என்ன சொல்கிறேனோ, அது உண்மை என்று தெரியவரும். மத்திய அரசு கர்நாடகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனால் தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறியுள்ளார். அந்த திட்டங்களை மீண்டும் கூற தேவை இல்லை. கர்நாடகம் வளர்ச்சி பாதையில் எப்படி பயணிக்கிறது என்பது பிரதமருக்கு நன்றாக தெரியும்.
முஸ்லிம்கள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு குறைவாக இருப்பதால் அந்த சமூகத்திற்கு நாங்கள் டிக்கெட் வழங்கவில்லை. வரும் காலத்தில் அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் முஸ்லிம் சமூகத்தினருக்கு டிக்கெட் வழங்கப்படும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்