search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    போலீசாக நடித்தவர்களின் மோசடியை அம்பலப்படுத்திய பெண்
    X

    போலீசாக நடித்தவர்களின் மோசடியை அம்பலப்படுத்திய பெண்

    • ஒரு பெண்ணிடம் வாட்ஸ்-அப் கால் மூலம் போலீசாக நடித்து பணம் பறிக்க முயன்ற சம்பவத்தையும், அந்த மோசடியை சரண்ஜீத் கவுர் என்ற பெண் அம்பலப்படுத்திய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
    • நீங்கள் ரூ.20 ஆயிரம் தந்தால் உங்கள் சகோதரியை விடுவித்து விடுவோம் என கூறுகின்றனர்.

    சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு வகைகளில் நூதன மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், சில நேரங்களில் பொதுமக்கள் ஏமாந்து பணத்தை இழந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் ஒரு பெண்ணிடம் வாட்ஸ்-அப் கால் மூலம் போலீசாக நடித்து பணம் பறிக்க முயன்ற சம்பவத்தையும், அந்த மோசடியை சரண்ஜீத் கவுர் என்ற பெண் அம்பலப்படுத்திய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சரண்ஜீத் கவுர் செல்போன் வாட்ஸ்-அப்பில் 2 போலீஸ் அதிகாரிகளின் படத்துடன் ஒரு அழைப்பு வருகிறது. அதில் தொடர்பு கொண்ட நபர், தான் டெல்லி காவல் துறையில் இன்ஸ்பெக்டர் என கூறுகிறார். பின்னர் அவர் அமைச்சரின் மகனை மிரட்டிய புகாரில் உங்களது சகோதரியை கைது செய்வதுள்ளதாக கூறி சரண்ஜீத் கவுரின் படத்தை அவரிடமே காட்டுகின்றனர். மேலும் நீங்கள் ரூ.20 ஆயிரம் தந்தால் உங்கள் சகோதரியை விடுவித்து விடுவோம் என கூறுகின்றனர்.

    இதை கேட்டு ஆவேசம் அடைந்த சரண்ஜீத் கவுர், என்னை கைது செய்ததாக என்னிடமே கூறி போலீஸ் அதிகாரிகளாக நடித்து பணம் பறிக்க முயன்றதை அம்பலப்படுத்திய காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவுடன் அவரது பதிவில் இதுபோன்ற மோசடிகளை பற்றி எனக்கு தெரியும். தயவு செய்து இதை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் என்னை காப்பாற்றி கொண்டேன். தயவு செய்து இதை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    இதனால் நீங்களும் இதுபோன்ற மோசடிகளை தடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது.



    Next Story
    ×