

பீகார்:
பீகார் மாநிலம் சமஸ்திபூரில் ரெயில் ஒன்று பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் திடீரென பிரஷர் கசிவு காரணமாக பாலத்தின் நடுவில் ரெயில் நின்றது. பிரஷர் லீக்கை சரி செய்தால்தான் ரெயில் முன்னோக்கி நகர முடியும். இதனால் டிரைவர் (லோக் பைலட்) தண்டவாளத்தில் இறங்கி பிரச்சனையை சரி செய்ய முடிவு செய்தார்.
இதையடுத்து, லோகோ பைலட் தனது உயிரை பணயம் வைத்து பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக ரெயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் புகுந்து ஊர்ந்து சென்று என்ஜினின் பிரஷர் கசிவை சரி செய்தார். சரி செய்த பின்னர் ரெயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையே ஊர்ந்து வந்து வெளியேறினார்.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பார்ப்போரை மெய்சிலிர்க்க செய்கிறது.