search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி உண்டியல் பணத்தை மாநகராட்சிக்கு ஒதுக்க கூடாது- ஆந்திர அரசு தேவஸ்தானத்துக்கு கடிதம்
    X

    திருப்பதி உண்டியல் பணத்தை மாநகராட்சிக்கு ஒதுக்க கூடாது- ஆந்திர அரசு தேவஸ்தானத்துக்கு கடிதம்

    • பா.ஜ.க, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
    • திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு மீது மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணத்தில் ஒரு சதவீதம் அல்லது ரூ.36 கோடியை திருப்பதி மாநகராட்சியின் வளர்ச்சி பணிக்கு ஒதுக்குவது என தேவஸ்தானம் முடிவு செய்தது.

    பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணத்தை மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்க பா.ஜ.க, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதனால் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு மீது மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிதி ஒதுக்கீடுக்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான ஆண்டு பட்ஜெட்டில் ஒரு சதவீதத்தை திருப்பதி மாநகராட்சி வளர்ச்சிப் பணிக்கு ஒதுக்க வேண்டாம் என நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு நிராகரித்துள்ளது.

    இது தொடர்பாக தலைமைச் செயலாளர் கரிகால் வளவன் திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    Next Story
    ×