என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மக்களை கேலி செய்ய விரும்புகிறார்கள்: அசைவ உணவு விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது மோடி விமர்சனம்
- மோடி இவ்வாறு செய்திருந்தால் அவர்களின் நோக்கம் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
- முகலாயர்கள் தாக்குதல் நடத்தியபோது, அவர்கள் மன்னர்களை தோற்கடித்ததுடன் திருப்தி அடையவில்லை.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிடுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதுவும் நவராத்திரி காலத்தின்போது இவ்வாறு செய்ததாக பா.ஜனதாவினர் கடுமையாக விமர்சித்தனர்.
இந்துக்களால் மங்களகரமானதாகக் கருதப்படும் காலங்களில் அசைவ உணவு சாப்பிடுவது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார் எனத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக விமர்சனம் எழுந்த நிலையில் தேஜஸ்வி யாதவ் "பா.ஜனதா மற்றும் கோடி மீடியாவை பின்தொடர்பவர்களுக்கான செயல்திறன் பரிசோதனை. இந்த வீடியோ நவராத்திரி தொடங்குவதற்கு முந்தையநாள் எடுக்கப்பட்டது" என விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது இந்துக்களால் மங்களகரமானதாகக் கருதப்படும் காலங்களில் அசைவ உணவு சாப்பிடுவது போன்ற வீடியோ வெளியிட்டு மக்களை கேலி செய்ய விரும்புகின்றனர் என ராகுல் காந்தி, லாலு யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ராகுல் காந்தி, லாலு யாதவ் ஆட்டிறைச்சி சமைத்தது தொடர்பான வீடியோவை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கு நாட்டில் அதிகப்படியாக உள்ள மக்களின் உணர்வுகள் குறித்து கவலை இல்லை. சவான் மாத்தின்போது (இந்திய காலண்டரில் மக்களகரமான மாதம்), அவர்கள் குற்றவாளியின் வீட்டிற்குச் சென்று ஆட்டிறைச்சி சமைக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் வீடியோவை அப்லோடு செய்து நாட்டு மக்களை கேலி செய்கிறார்கள்.
எதைச் சாப்பிடக் கூடாது என சட்டம் தடைபோடுவதில்லை. மாறாக மோடி இவ்வாறு செய்திருந்தால் அவர்களின் நோக்கம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். முகலாயர்கள் தாக்குதல் நடத்தியபோது, அவர்கள் மன்னர்களை தோற்கடித்ததுடன் திருப்தி அடையவில்லை. கோவில்களை அழித்ததோடு அவர்கள் திருப்தி அடையவில்லை. அவர்கள் அதை அனுபவித்தார்கள். அதேவழியில் சவான் மாதத்தில் வீடியோக்ளை அப்லோடு செய்து அவர்கள் முகலாயர்கள் காலத்தின் சிந்தனைகளை வெளிப்படுத்தி மக்களை கேலி செய்து அவர்களின் வாக்கு வங்கிகளை உயர்த்த முயற்சிக்கிறார்கள்.
அதேவழியில் நவராத்தியின்போது (தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிடும் வீடியோவை குறித்து) மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி யாரை திருப்திப்படுத்த முயற்சிக்கிறீர்கள்? இப்படிச் சொன்னதற்காக இவர்கள் இப்போது என் மீது துஷ்பிரயோகங்களைப் பொழிவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் எல்லையை தாண்டும்போது எது சரி என்று மக்களுக்குச் சொல்வது ஜனநாயகத்தில் எனது கடமை. நான் எனது கடமையைச் செய்கிறேன்.
அவர்கள் வேண்டுமென்றே நாட்டின் நம்பிக்கைகளைத் தாக்குவதற்காக இதைச் செய்கிறார்கள், இதனால் நாட்டின் பெரும்பகுதியினர் அவர்களின் வீடியோக்களைப் பார்த்து அசௌகரியம் அடைகின்றனர். அவர்கள் சமரச அரசியலை தாண்டி முகலாய சிந்தனைக்கு ஆதாரமாக உள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்