என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி நினைவாற்றலை வேகமாக இழந்து வருகிறார்: ஜெய்ராம் ரமேஷ்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பிரதமர் மோடி நினைவாற்றலை வேகமாக இழந்து வருகிறார்: ஜெய்ராம் ரமேஷ்

    • இன்று சொல்வதை நாளை மறந்துவிடுவார். சொல்லவே இல்லை என்கிறார்.
    • அவர் காங்கிரஸ் கட்சியைத் தாக்கி வருகிறார். அவர் இந்து- முஸ்லிம் பற்றி பேசுகிறார்.

    பிரதமர் மோடி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கும்போது, சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனக் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    பிரதமர் தனது நினைவாற்றலை வேகமாக இழந்து வருகிறார். உண்மை மீது அவருக்கு ஒருபோதும் பற்று இருந்ததில்லை.

    அவர் ஒரு பொய்யர் (jhoothjeevi). இன்று சொல்வதை நாளை மறந்துவிடுவார். சொல்லவே இல்லை என்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியைத் தாக்கி வருகிறார். அவர் இந்து- முஸ்லிம் பற்றி பேசுகிறார். அவர் மங்களசூத்ரா பற்றி பேசுகிறார். அவர் முஸ்லிம் லீக் பற்றி பேசுகிறார். காங்கிரஸ் கட்சி மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கிறது என பேசுகிறார். இவை அனைத்தும் அவர் கூறிய பொய்யானவை.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×