search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடும்ப தகராறில் விபரீதம்: 2 குழந்தைகளை கொன்று ஆசிரியை தற்கொலை
    X

    குடும்ப தகராறில் விபரீதம்: 2 குழந்தைகளை கொன்று ஆசிரியை தற்கொலை

    • வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜோதி பாலில் விஷம் கலந்து அவரது மகன்களுக்கு கொடுத்தார்.
    • ஜோதி தன்னுடைய சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் பஞ்சாரா ஹில்ஸ் என்.பி. டி. நகரை சேர்ந்தவர் மெனரிகா. இவருடைய மனைவி ஜோதி (வயது 32). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    தம்பதியின் மகன்கள் அர்ஜுன் (4), ஆதித்யா (2). கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. திருமண வாழ்க்கையால் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வருவதாக ஆசிரியர் ஜோதி மன வருத்தமடைந்தார்.

    வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று காலை பாலில் விஷம் கலந்து அவரது மகன்களுக்கு கொடுத்தார். அதனை குடித்த சிறிது நேரத்தில் குழந்தைகள் இருவரும் துடிதுடித்து இறந்தனர்.

    இதை பார்த்து அழுது துடித்த ஜோதி தன்னுடைய சேலையால் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வீட்டுக்கு வந்த அவரது உறவினர்கள் ஜோதி மற்றும் குழந்தைகள் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பஞ்சாரஹில்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆசிரியை மற்றும் குழந்தைகள் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×