என் மலர்tooltip icon

    இந்தியா

    சோனியா காந்தி ராஜஸ்தான் சென்றார்- நாளை பிறந்தநாள் கொண்டாட்டம்
    X

    சோனியா காந்தி ராஜஸ்தான் சென்றார்- நாளை பிறந்தநாள் கொண்டாட்டம்

    • சோனியா காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்றார்.
    • ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி தங்க உள்ள புந்தா பகுதிக்கு சென்றார்.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை அவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் இருந்து 92 -வது நாளாக தனது நடைபயணத்தை தொடங்கினார். இந்த மாநிலத்தில் அவர் 17 நாட்கள் 500 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்கிறார். இன்று இரவு அவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு புந்தாவில் தங்குகிறார்.

    இந்தநிலையில் சோனியா காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்றார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி தங்க உள்ள புந்தா பகுதிக்கு சென்றார்.

    சோனியா காந்திக்கு நாளை பிறந்தநாள் ஆகும். இதற்காக அவர் ராஜஸ்தான் சென்றுள்ளார். இதையொட்டி ராகுல்காந்தி நாளை நடை பயணம் செல்லவில்லை. நாளை மறுநாள் ( 10-ந்தேதி) மீண்டும் தனது பயணத்தை தொடங்குகிறார்.

    Next Story
    ×