என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

மத்திய பிரதேசத்தில் திருமணத்திற்கு சென்ற மினி லாரி கவிழ்ந்து 5 பேர் பலி- 36 பேர் படுகாயம்

- திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக 42 பேர் மினி லாரியின் சென்றனர்.
- ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம், ஷாதோல் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி லாரி கவிழ்ந்ததில் சிறுவன் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து பியோஹாரி காவல் நிலையத்தின் பொறுப்பாளர் கதிர் சோனி கூறியதாவது:-
திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக 42 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரி ஒன்று டிகாஹி கிராமத்தில் உள்ள ஒரு தாபா அருகே திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 15 வயது சிறுவன் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 36 பேர் விபத்தில் காயமடைந்தனர். அவர்களில் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இறந்தவர்கள் 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள். படுகாயமடைந்த 10 பேர் ஷாதோல் மருத்துவக் கல்லூரியிலும், மற்றவர்கள் பியோஹாரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
