என் மலர்tooltip icon

    இந்தியா

    மாணவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தானும் சுட்டுக்கொண்ட மாணவர்... வகுப்பறையில் அதிர்ச்சி சம்பவம்
    X

    மாணவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தானும் சுட்டுக்கொண்ட மாணவர்... வகுப்பறையில் அதிர்ச்சி சம்பவம்

    • போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் இன்று காலை முதலாம் ஆண்டு சட்ட கல்லூரி மாணவர் சக தோழியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிரின்ஸ் ராஜ் என்பவர் இன்று காலை சரியாக 9.15 மணிக்கு வகுப்பறையில் அமர்ந்திருக்கும்போது திடீரென எழுந்து கையில் இருந்து துப்பாக்கியை எடுத்து பின்னால் அமர்ந்திருந்த சந்தீப் கவுர் என்ற சக மாணவியை துப்பாக்கியால் சுட்டார். இதனால் வகுப்பறையில் இருந்த மாணவிகள் துப்பாக்கிச்சத்தத்தை கேட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதையடுத்து பிரின்ஸ் ராஜ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரின்ஸ் ராஜ் ஏன் சந்தீப் கவுரை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×