என் மலர்
இந்தியா

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தையொட்டி காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியாகாந்தி நாளை ஆலோசனை
- பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டமும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நாளை நடைபெறுகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த சிறப்பு கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி நாளை ஆலோசனை நடத்துகிறார். சிறப்பு கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய மக்களின் பிரச்சினைகள் என்ன? மத்திய அரசு முக்கிய மசோதாக்களை கொண்டு வந்தால் எப்படி எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டமும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நாளை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






