search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிவசேனா கட்சி விவகாரம் - உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
    X

    சுப்ரீம் கோர்ட்

    சிவசேனா கட்சி விவகாரம் - உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

    • சிவசேனா கட்சி பெயர், சின்னம் ஆகிவற்றை ஷிண்டே தரப்பிடம் ஒப்படைத்தது.
    • எம்.எல்.ஏ.க்கள் பலத்தை அடிப்படையாக வைத்து இம்முடிவை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தனர்.

    இதற்கிடையே, தாங்கள் தான் உண்மையான சிவசேனா என முதல் மந்திரி ஷிண்டே மற்றும் முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே ஆகிய இரு தரப்பிலும் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த தேர்தல் ஆணையம் ஷிண்டே தரப்பினர் தான் உண்மையான சிவசேனா என கடந்த வெள்ளிக்கிழமை முடிவை அறிவித்தது.

    சிவசேனா கட்சி பெயர், சின்னம் ஆகிவற்றை ஷிண்டே தரப்பிடம் ஒப்படைத்தது. எம்.எல்.ஏ.க்கள் பலத்தை அடிப்படையாக வைத்து இந்த முடிவை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட்டிடம் கோரிக்கை வைத்தார்.

    இந்நிலையில், உத்தவ் தாக்கரே தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் சிவ சேனா தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுகோள் விடுத்தார். மேலும், தேர்தல் ஆணையத்தின் முடிவை அடுத்து, கட்சியின் சொத்துக்களை கைப்பற்றும் முயற்சி நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று மாலை 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×