search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாற்றுத்திறனாளி பெண்ணிடம் லாட்டரி சீட்டு வாங்கிய ராகுல் காந்தி
    X

    ராகுல்காந்தி மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பேசிய போது எடுத்த படம்.

    மாற்றுத்திறனாளி பெண்ணிடம் லாட்டரி சீட்டு வாங்கிய ராகுல் காந்தி

    • ராகுல்காந்தி கடந்த 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார்.
    • ராகுல்காந்தி மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார்.

    திருவனந்தபுரம் :

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். அவர் நேற்று முன்தினம் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சென்றடைந்தார். பாதயாத்திரை செல்லும் வழியில் குழந்தைகள், மாணவ-மாணவிகள், முதியவர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகளை கேட்டு வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் பாதயாத்திரையின் போது லாட்டரி சீட்டு விற்கும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். இந்த ருசிகர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளியை சேர்ந்தவர் சுதா மணியம்மா (வயது53). மாற்றுத்திறனாளியான இவர் தனது சகோதரனுடன் வசித்து வருகிறார். ஏழ்மை காரணமாக லாட்டரி டிக்கெட் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் பாதயாத்திரை வரும் ராகுல் காந்தி பாரிப்பள்ளி வழியாக கடந்து சென்றார். இதையறிந்த சுதா மணியம்மா ராகுல் காந்தியின் முகத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என விரும்பினார். ஆனால் குள்ளமான அவரால், அந்த கூட்ட நெரிசலில் ராகுல் காந்தியை பார்க்க முடியவில்லை.

    இதையறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் சுதா மணியம்மாவை ராகுல் காந்தி அருகே கொண்டு வந்து நிறுத்தினர். ராகுல் காந்தி அருகில் நின்ற சுதா மணிக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அப்போது ராகுல் காந்தி, அந்த பெண்ணின் நிலைக்கு தன்னை தாழ்த்தி பேச்சு கொடுத்தார். ஒருவருக்கு ஒருவர் பேசியது இருவருக்கும் புரியவில்லை. அப்போது அருகில் நின்ற கட்சி நிர்வாகிகள் அதுபற்றி மொழிபெயர்த்து ராகுல்காந்தியிடம் தெரிவித்தனர்.

    தொடர்ந்து ராகுல்காந்தி அந்த பெண்ணிடம் பணம் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டை வாங்கிக்கொண்டார். பின்னர் அந்த பெண்ணிடம் இருந்து விடைபெற்று மீண்டும் தனது பாதயாத்திரையை தொடர்ந்தார்.

    ராகுல்காந்தியை சந்தித்தது குறித்து சுதாமணியம்மா கூறியதாவது:-

    ராகுல்காந்தியை நான் நேரில் பார்ப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அவர் தன்னிலை மறந்து, என் நிலைக்கு தன்னை தாழ்த்திக்கொண்டு என்னிடம் பேசியதை பார்த்து வியந்து போனேன். அவரை அருகில் நின்று பார்த்ததை பாக்கியமாக நினைக்கிறேன். இது பம்பர் லாட்டரி அடித்ததை போல் உள்ளது. நான் விற்ற டிக்கெட்டுக்கு ராகுல்ஜிக்கு பரிசு கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×