search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும்: பிரதமர் மோடி
    X

    அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும்: பிரதமர் மோடி

    • ஒடிசாவின் கேந்திரபாராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர், அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போகும் என்றார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அடுத்த 6 மாதங்களில் ஒரு புதிய உத்வேகத்துடன் நாடு வளர்ச்சி அடையும்.

    அதே சமயம், அந்த 6 மாதங்களில் அரசியலில் மிகப்பெரிய சூறாவளியும் வரப்போகிறது.

    குடும்ப கட்சிகளின் உறுப்பினர்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.

    அவர்களது தொடர் தோல்வி குறித்து சொந்த கட்சியினரே கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர்.

    எனவே அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×