என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பிரதமர் மோடி இதுவரை மதத்தை வைத்து அரசியல் செய்ததே கிடையாது: ராஜ்நாத் சிங்
- அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாக தெரிவித்தார்.
- இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாராவில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளங்கள் முதலில் சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 2006 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் மதத்தின் பேரில் அரசியல் செய்வதாக எதிர்கட்சிகள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், கௌதம புத்த நகர் தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளர் மகேஷ் ஷர்மாவுக்கு ஆதரவாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிரேட்டர் நொய்டாவில் நேற்று வாக்கு சேகரித்தார்.
அப்போது, பொது மக்களிடையே பேசிய அவர் மதத்தின் பேரில் அரசியல் செய்வது, சமூகத்தை பிளவுப்படுத்த நினைப்பது போன்ற செயல்களில் பிரதமர் மோடி ஈடுபட்டதே இல்லை என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசும் போது, "சகோதர சகோதரிகளே பிரதமரை எனக்கு இப்போது தான் தெரியும் என்றே இல்லை. நீண்ட காலம் அவருடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்து வருகிறது. அவர் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என மதத்தின் பேரில் எப்போதும் அரசியல் செய்ததே இல்லை. நமது பிரதமர் சமூகத்தை பிளவுபடுத்த ஒருபோதும் நினைத்ததே இல்லை," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "டாக்டர் மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார். இன்றும் அவர் மீது எனக்கு மதிப்பு உள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த 2006 டிசம்பர் 9 ஆம் தேதி பேசிய டாக்டர் மன்மோகன் சிங், யாருக்கேனும் நாட்டின் சொத்துக்கள் மீது உரிமை இருப்பின், அது நிச்சயம் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்காகவே இருக்க வேண்டும் குறிப்பாக இதை கூறும் போது சிறுபான்மை சமூகமாக அவர் முஸ்லீம்களையே குறிப்பிட்டார்."
"நாட்டின் வளங்கள் மற்றும் சொத்துக்கள் மீது அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்று அவர் தெரிவித்தார், நாங்கள் அப்படி கூறவே இல்லை. இப்போது பிரதமர் இதை சொன்னதும், அதனை சர்ச்சையாக்க முயற்சிக்கின்றனர்," என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்