என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
    X

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை

    • முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
    • வருகிற 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றம் ஆண்டுக்கு 3 முறை கூட்டப்படும். அதன்படி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் 2 அமர்வாக நடைபெறுகிறது. முதல் அமர்வு இன்று தொடங்கி முதல் வருகிற 13-ந் தேதி வரையும், 2-ம் அமர்வு மார்ச் மாதம் 9-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரையும் நடக்கிறது.

    தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநில சட்டமன்றங்களில் ஆளுநரின் செயல்பாடு உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டம் தொடங்குகிறது.

    முதல் நாளான இன்று, பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

    வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இது 9-வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

    5 மாநில தேர்தலை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    Next Story
    ×