search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவு - அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிப்பு
    X

    பீகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவு - அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிப்பு

    • பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று மதியம் தொடங்கியது.
    • இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    பாட்னா:

    மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே, பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று மதியம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா, ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பா.ஜ.க. அரசை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

    இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் இமாசல பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×