என் மலர்tooltip icon

    இந்தியா

    குழந்தைகள் சண்டையில் பெண் ஆக்ரோஷம்- வீடியோ
    X

    குழந்தைகள் சண்டையில் பெண் ஆக்ரோஷம்- வீடியோ

    • பெண்மணி தனது மகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 6 வயது சிறுவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
    • வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. குடியிருப்பில் உள்ள பூங்காவில் 6 வயதே ஆன இரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    அப்போது அதில் ஒரு சிறுவன் தனது அம்மாவிடம் இதுகுறித்து முறையிடவே, அந்த பெண்மணி தனது மகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 6 வயது சிறுவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அப்போது அங்கே வந்த மற்றொரு சிறுவனின் தாயார் இதுதொடர்பான சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ பதிவு எடுக்க முயன்றார்.

    அப்போது அந்த பெண்ணிடமும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவருடைய செல்போனையும் தட்டி விட்டார். சிறு பிள்ளைகள் சண்டையில் பெண் ஒருவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.



    Next Story
    ×