#RajyaSabhaElection: நிதிஷ் குமார் வேட்புமனு தாக்கல்

நிதிஷ் குமார் விலகினால் பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல்.
#RajyaSabhaElection: நிதிஷ் குமார் வேட்புமனு தாக்கல்
Published on

பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற 4 மாதங்களே ஆன நிலையில் பதவியில் இருந்து விலகுவதை நிதிஷ் குமார் உறுதி செய்துள்ளார்.

ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் பீகாரின் புதிய அரசிற்கு அனைத்து விதத்திலும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் முழு மனதுடன் பீகார் மக்களுக்கு பணியாற்றியதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு தேர்தலில் என்டிஏ கூட்டணியில் வென்ற நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக 10வது முறையாக பொறுப்பேற்றார்.

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபின் நிதிஷ் குமார் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில்,"தொடக்கத்தில் இருந்தே சட்டமன்ற, நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற ஆசை என் மனதில் இருந்தது. எனவே இம்முறை மாநிலங்களவை உறுப்பினராக விரும்புகிறேன்" என்றார்.

இந்நிலையில், அமித்ஷா, நிதின் நபின் முன்னிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட நிதிஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com