என் மலர்
இந்தியா

ரூ.500 நோட்டுகளை ஒழிக்கணும்.. மீண்டும் பணமதிப்பிழப்பு கோரும் சந்திரபாபு நாயடு!
- நான் அவரிடம் (மோடியிடம்) ஒரே ஒரு விஷயத்தைக் கேட்டுக் கொண்டேன்.
- ஊழல் செய்பவர்களை எளிதாகப் பிடிக்க முடியும்
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.500 நோட்டை ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது பேசிய சந்திரபாபு நாயுடு, ரூ. 500 நோட்டுகளை நிறுத்த வேண்டும்.
இப்போது அதிகமான மக்கள் டிஜிட்டல் பணத்தைப் பயன்படுத்துவதால், அனைத்து பெரிய நோட்டுகளையும் நீக்குவது ஊழலைக் குறைக்க உதவும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பிரதமர் மோடியிடம் டிஜிட்டல் நாணயம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்ததை நினைவு கூர்ந்தார்.
"நான் அவரிடம் (மோடியிடம்) ஒரே ஒரு விஷயத்தைக் கேட்டுக் கொண்டேன். இன்று, நீங்கள் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை ரத்து செய்துவிட்டு, புதிய ரூ.2,000 நோட்டை அறிமுகப்படுத்துகிறீர்கள். தேவைப்பட்டால், ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை ரத்து செய்யுங்கள்.
டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்துங்கள்.ஊழல் செய்பவர்களை எளிதாகப் பிடிக்க முடியும்" என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
மேலும், பெரிய ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே ஊழல் முடிவுக்கு வரும். மத்திய அரசு விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயடு வலியுறுத்தினார்.






