என் மலர்tooltip icon

    இந்தியா

    செங்கல் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கவும்: நிதி மந்திரியிடம் வலியுறுத்திய கனிமொழி எம்.பி.
    X

    செங்கல் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கவும்: நிதி மந்திரியிடம் வலியுறுத்திய கனிமொழி எம்.பி.

    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி சந்தித்தார்.
    • அப்போது செங்கல் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி சந்தித்தார்.

    இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:

    மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். அப்போது செங்கல் மீதான ஜி.எஸ்.டி.யை அவசரமாகக் குறைக்கவும், ஐடிசி இல்லாமல் 3 சதவீதம் மற்றும் ஐடிசியுடன் 5 சதவீதம் ஆகியவற்றை முன்மொழியவும், பர்னர் பயன்பாட்டின் அடிப்படையில் கூட்டு வரியை அறிமுகப்படுத்தவும் கோரிக்கை விடுத்தேன்.

    இதனால் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட செங்கல் அலகுகள் மற்றும் மில்லியன் கணக்கான கிராமப்புற வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×