என் மலர்tooltip icon

    இந்தியா

    தலைமை நீதிபதி  வீட்டில் பூஜை போட்ட மோடி..  விநாயகர் சதுர்த்தி சர்ச்சைக்கு சந்திரசூட் விளக்கம்
    X

    தலைமை நீதிபதி வீட்டில் பூஜை போட்ட மோடி.. விநாயகர் சதுர்த்தி சர்ச்சைக்கு சந்திரசூட் விளக்கம்

    • பாபர் மசூதி- ராமர் கோவில் தீர்ப்புக்கு முன்னர் தான் கடவுளிடம் வேண்டியதாக கூறினார்.
    • இந்த சந்திப்புகள் ஏன் நடக்கின்றன என்ற பலர் யோசிக்கின்றனர்.

    தலைமை நீதிபதி சந்திரசூட் தனது தனிப்பட்ட விஷயங்கள் மூலம் தான் வகிக்கும் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக சந்திரசூட் இல்லத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டது நீதித்துறையின் நடுநிலைமை மீதான நம்பகத் தன்மையை முற்றிலுமாக மக்கள் இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

    மேலும் பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று தான் 2018 இல் வழங்கிய தீர்ப்பு குறித்து சமீபத்தில் பேசிய அவர், அந்த தீர்ப்புக்கு முன்னர் தான் கடவுளிடம் வேண்டியதாகவும் அதன்படி கடவுளிடம் வேண்டினால் அவர் வழிகாட்டுவார் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது வீட்டின் விநாயகர் சதுர்த்தி நிகழ்வில் கலந்துகொண்டது குறித்து சந்திரசூட் தற்போது பேசியுள்ளார்.

    டெல்லியில் நடந்த லோக்சட்டா கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரசூட், இதுபோன்ற சந்திப்புகள் ஏன் நடக்கின்றன என்ற பலர் யோசிக்கின்றனர். ஆனால் அரசியல் தலைவர்களுடன் நிகழும் சந்திப்பின்போது தொடர்புடைய வழக்குகள் மற்றும் நீதித்துறை சார்ந்த விஷயங்கள் பேசப்படாது.

    நீதித்துறை மீது அரசியல் தலைவர்கள் வைத்துள்ள மரியாதை அவர்களின் அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது. நீதித்துறைக்கான நிதியை நீதிபதிகள் ஒதுக்குவதில்லை. அரசுகள் தான் ஓதுகின்றன. நீதிமன்ற கட்டடங்கள், நீதிபதிகளுக்கான வீடுகளுக்கு அரசு நிதி தேவை. இதற்கு தலைமை நீதிபதிகள் மாநில முதலமைச்சர்களை சந்திக்க வேண்டி உள்ளது.

    நானும் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக இருந்துள்ளேன். அப்போது நான் முதல்வர் வீட்டுக்கு செல்வதும் முதல்வர் எனது வீட்டுக்கு வருவதும் சகஜமாக நடக்கும். இந்த சந்திப்புகளை நேரில் சந்திக்காமல் கடிதம் மூலம் நடத்த முடியாது. இந்த சந்திப்புகளின்போது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து முதல்வர் எந்த கேள்வியும் கேட்கமாட்டார் எனவே நீதித்துறை பணிகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்று பேசியுள்ளார். சந்திரசூட்டின் பதவிக்காலம் வரும் நவம்பர் 10 ஆம் தேதி முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×