search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிஏஏ சட்ட அமலுக்கு தடைவிதிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டை நாடிய கேரளா
    X

    சிஏஏ சட்ட அமலுக்கு தடைவிதிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டை நாடிய கேரளா

    • குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம்.
    • பாராளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    2014, டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    இதற்கிடையே, குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம். சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.

    இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது.

    Next Story
    ×