search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் கிராமந்தோறும் அரசு பள்ளி - கெஜ்ரிவால் உறுதி
    X

    அரவிந்த் கெஜ்ரிவால்

    குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் கிராமந்தோறும் அரசு பள்ளி - கெஜ்ரிவால் உறுதி

    • குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு கிராமத்திலும் அரசு பள்ளி கட்டப்படும்.
    • மேலும், அரசு மருத்துவமனையும் கட்டித்தரப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் சுறுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கட்ச் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:

    வரப்போகும் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் குஜராத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் அரசு பள்ளி, அரசு மருத்துவமனைகளை கட்டித்தருவேன்.

    டெல்லியில் கொண்டு வந்துள்ள கல்வித் திட்டத்தை இங்கு அமல்படுத்துவேன். உங்கள் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமெனில் ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என தெரிவித்தார்.

    Next Story
    ×