என் மலர்
இந்தியா

மதக்கலவரத்தை உருவாக்குவது தான் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம் - கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
- நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார்.
- திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாக இருக்கும் நடைமுறையை மாற்றக் கேட்பது சரியானது அல்ல.
திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாக கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
* தமிழ்நாட்டில் மதநல்லிணக்க சூழலை சீர் குலைக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து முயற்சி செய்கிறது.
* நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார்.
* 2014-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
* ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்லில் தீபத்தை ஏற்றச் சொல்கிறார்கள்.
* திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கூறி வருகிறார்கள்.
* இப்படி பேசுவது உங்களுக்கும், கட்சிக்கும் நல்லதல்ல என கிரண் ரிஜிஜூ மிரட்டுகிறார்.
* பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பொய் பிரசாரம் செய்கிறார்.
* மதக்கலவரத்தை உருவாக்குவது தான் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம்.
* திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாக இருக்கும் நடைமுறையை மாற்றக் கேட்பது சரியானது அல்ல.
* நீதிமன்றத்தை பயன்படுத்தி கலவரத்தை தூண்ட முயற்சிப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.






