என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று பெங்களூரு வருகை
- விஜய சங்கல்ப யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
- விஜய சங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பெங்களூரு :
கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் சித்தராஜூ பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி எங்கள் கட்சி சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. பெங்களூரு கே.ஆர்.புராவில் நாளை(இன்று) நடைபெறும் விஜய சங்கல்ப யாத்திரையில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்கிறார்.
தனி விமானம் மூலம் வரும் அவர் மாலை 5.20 மணிக்கு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் கே.ஆர்.புரத்திற்கு வரும் அவர், அங்கு நடைபெறும் விஜய சங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதில் கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள் ஆர்.அசோக், எம்.டி.பி.நாகராஜ், பைரதி பசவராஜ், சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு சித்தராஜூ கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்